ஜனநாயக கடமை ஆற்றிட முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்குமார்.!! 
                                    
                                    
                                   Actor Ajith Kumar voted as 1st person
 
                                 
                               
                                
                                      
                                            தமிழ்நாடு முழுவதும் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திர கோராறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் முயற்சியில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

மக்களவைப் பொதுத் தேர்தலில் பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிட ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சென்னை திருவான்மியூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் வந்து காத்திருந்து முதல் ஆளாக தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். 
                                     
                                 
                   
                       English Summary
                       Actor Ajith Kumar voted as 1st person