குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட தேசிய கொடி - உதவி ஆய்வாளர் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்திற்கு வருகை தந்தனர். 

அப்போது, மைதானத்திற்கு வெளியே, ரசிகர்கள் கொண்டுவந்த இந்திய தேசியக் கொடியை காவல் உதவி ஆய்வாளரான நாகராஜன், குப்பைத் தொட்டியில் போட முயன்றுள்ளார்.

இந்த நிலையில்,நாட்டின் தேசியக் கொடியை குப்பை தொட்டியில் போட முயன்ற காவல் உதவி ஆய்வாளர் மீது விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை விளக்கம் அளித்து இருந்தது. 

அதன் படி, தேசியக் கொடியை அவமதித்த உதவி ஆய்வாளர் நாகராஜன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

action againts sub inspector for national flag throw dust bin in chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->