மகர விளக்கு பூஜைக்கு சென்று வந்த ஐயப்ப பக்தர்கள்... மினிபேருந்து கவிழ்ந்து விபத்து..!
Accident Near Kerala
ஐயப்ப பக்தர்கள் மினி பேருந்து கவிழ்ந்து விழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று தரிசனம் முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த மினி பேருந்து பத்தனம் திட்ட ளாஹ என்னும் பகுதியில் எதிர்பாராத விதமாக ஒட்டுநரின் கட்டுபாட்டை இழந்தது.
இதில், மினி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், மினிபேருந்தில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.