சென்னை | கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து! குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயம்! - Seithipunal
Seithipunal


ஆவடியில்  சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், பேரன், பேத்தி என4 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த கோயில் பதாகை கலைஞர் நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. 

சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு அதிர்ந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். 

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

அப்போது படுகாயங்களுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் ரோஜா, மகன் சங்கர், பேத்தி கீர்த்திகா, பேரன் கெளதம் ஆகியோரை மீட்ட தீயணைப்பு துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட தகவலின்படி கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்ததாக தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aavadi horrible accident cylinder burst


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->