15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - இளைஞருக்கு வாழ்நாள் சிறை - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் இலியாஸ். இவருக்கு 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலியாஸ் கடந்த 2020ஆம் ஆண்டு சிறுமியை அதே பகுதியில் உள்ள சவுக்கு தோப்பிற்கு வரவழைத்து வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் இலியாசை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இல்லியாசுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூபாய் 5 லட்சத்து 5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து இலியாஸ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A youth who raped a 15 year old girl has been jailed for life in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->