மழை பெய்ததால் மரத்தடியில் நின்ற இளைஞர்.! மரக்கிளை முறிந்து விழுந்து பலி.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் மரத்தடியில் நின்றிருந்த இளைஞர் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் பிரசாந்த்(23). இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றபோது, திடீரென மழை பெய்ததால் அப்பகுதியில் இருந்த ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்று உள்ளார். 

அப்பொழுது பலத்த காற்றுடன் மழை பெய்ததால், எதிர்பாராத விதமாக மரக்கிளை முறிந்து கீழே நின்றிருந்த பிரசாந்த் மீது விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த பிரசாந்தை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A youth died due to a falling a tree in madurai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->