செல்போனால் ஏற்பட்ட விபரீதம்.! 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி.!
A young man died after falling from the house second floor in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள என்.ஜி.ஓ காலனி குஞ்சன்விளை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (32). இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த மகேஷ், வீட்டின் இரண்டாவது மாடியில் நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது செல்போனில் பேசிக்கொண்டே எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மகேஷை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே மகேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மகேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A young man died after falling from the house second floor in kanniyakumari