மன உளைச்சலில் ஜவுளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை.!
A person commits suicide by drinking poison in theni
தேனி மாவட்டத்தில் மன உளைச்சலால் ஜவுளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி சேர்ந்தவர் மூர்த்தி (54). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் பெட்டி கடை வைத்துள்ளார். ஆனால் போதிய வருமானம் இல்லாததால், தொழிலில் நஷ்டம் அடைந்த மூர்த்தி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இதனால் மூர்த்தி வாழ்க்கையில் வெறுப்படைந்து, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்து போலீசார் உயிரிழந்த மூர்த்தியை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பு:
[உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே அழையுங்கள்:
மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் - 104
சினேஹா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050
உங்களின் தோழன், தோழியாக பரிவுடன் பேச தயார். உங்கள் தனிப்பட்ட விவரம் வெளியிடப்படாது. பயமின்றி அழையுங்கள். புது வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.]
English Summary
A person commits suicide by drinking poison in theni