#புதுக்கோட்டை || சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தவர் கைது.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆலங்குடி மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கீழாத்தூர் பகுதியை சேர்ந்த மோகன்(53) என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் அவரிடம் இருந்த 25 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மோகனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A person arrested for liquor selling in Pudukkottai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->