அடக்கடவுளே!போலீஸ் எனக்கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர்...! நடந்தது என்ன?
A man who harassement a woman by pretending to be a police officer What happened
சென்னையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பெரம்பலுரைச் சேர்ந்த கிராமத்தில் வசிக்கும் 20 வயதுடைய பெண் பணியாற்றி வருகிறார். அவர் சென்னையிலிருந்து பேருந்தில் புறப்பட்டு, நேற்று முன்தினம் அதிகாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்திறங்கினார்.

அதன்பிறகு, அவர் அங்கு வந்த காதலனுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி அருகிலிருந்த ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச்சென்றார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர், திடீரென அவர்கள் இருவரையும் வழிமறித்து, தான் காவலர் என்று தெரிவித்து இந்த நேரத்தில் எங்கிருந்து வருகிறீர்கள்?, எங்கு செல்கிறீர்கள் எனக்கேட்டு மிரட்டியுள்ளார்.
மேலும் அவர், அப்பெண்ணின் காதலனை திட்டி தாக்கி மிரட்டி அனுப்பி வைத்துவிட்டு அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அழைத்துச் சென்றார்.
அதில் செல்லும் வழியிலேயே அந்த நபர், அப்பெண்ணிடம் பணம் பறித்து கொண்டதுடன் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார். உடனே அப்பெண் கூச்சலிட்டதால் அந்த நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார்.
இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில் சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வரும் விக்கிரவாண்டியை சேர்ந்த 36 வயதான லாரன்ஸ் என்பவரை காவலர்கள் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A man who harassement a woman by pretending to be a police officer What happened