இரு உயிர்களை பலி வாங்கிய கோபம்., திருவண்ணாமலையில் நடந்த அவலம்..!!
A man committed suicide due killing His Wife
ஆத்திரத்தில் மனைவியை கொன்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆகாரம் கிராமத்தில் வசித்து வருபவர் மூர்த்தி. இவருக்கு கலைசெல்வி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். கலைச்செல்வியின் தந்தைக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மூர்த்தி அவருக்கு ஆரணி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கி தந்துள்ளார்.
6 ஆண்டுகளாக வட்டி செலுத்தாதால் கடன் கொடுத்தவர் மூர்த்தியிடம் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இதனால் மூர்த்திக்கும் கலைச்செல்விக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவதன்று கடன் தொகையை திரும்ப செலுத்துவது குறித்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் அடித்துள்ளார்.இதனால் கலைசெல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கோபத்தால் மனைவியை கொலை செய்ததை உணர்ந்த அவர் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அருகில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவலளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோபத்தால் இரு உயிர்கள் பறிபோனது மட்டுமின்றி குழந்தைகள் இருவரும் நிர்கதியாக நிற்பது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A man committed suicide due killing His Wife