விருதுநகர்: இளைஞர் மர்ம மரணம்..!!
A man commited to suicide
விருதுநகர் மாவட்டம், சிவகாசி,சேனையாபுரம் காலணியை சேர்ந்தவர் காளிராஜன் (வயது 26). இவருக்கு திருமணமாகி அழகுராசாத்தி என்ற மனைவி இருக்கிறார். காளிராஜன் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரின் மனைவிக்கு வளைகாப்பு விழா நடந்துள்ளது. இதனால் அவர் மாமியார் வீட்டிலேயே மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இத்ற்கிடையில் சம்பவதன்று, அவர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு அவரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காளிராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறெதும் நடந்ததா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
English Summary
A man commited to suicide