மாற்றுக் கட்சியினர் ஏராளமானோர் அதிமுகவில்  இணைந்தனர்! - Seithipunal
Seithipunal


ஆற்காட்டில் மாற்றுக் கட்சியில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில்  இணைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தை ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில் ஆற்காடு மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்வேறு மாற்று கட்சியில் இருந்து  சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் பொன். கு. சரவணன் தலைமையில் அஇஅதிமுகவில் இணைந்தனர்.  இந்த நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை  மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார்  தலைமை தாங்கினார். இந்த நிகழ்விற்கு முன்னாள் அதிமுக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் கே. சி. வீரமணி மற்றும் இந்து சமய அறநிலைத்துறை முன்னாள் அமைச்சர் சேவூர். ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அதிமுகவில் இணைத்து கொண்ட மாற்று கட்சியினரை வரவேற்று அதிமுக துண்டை அணிவித்து உற்சாகத்துடன் அதிமுகவில் இணைத்து கொண்டனர்..

இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. கே. ஆர். சீனிவாசன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச்செயலாளர் பெல் .தமிழரசன், எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, மாவட்ட துணைச்செயலாளர் வேதகிரி, நகர செயலாளர்கள் ஜும் சங்கர், டபுள்யு. ஜி. மோகன், கே.பி. சந்தோஷம், பிற அணி மாவட்ட நிர்வாகிகள் ஏழில்அரசன், உமர்பாரூக், ராதிகா, விஜய்ஆனந்த் உள்ளிட்ட நகர, ஒன்றிய, பேரூர் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A large number of opposition party members have joined the AIADMK


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->