ஷாம்பு வாங்க வந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்... மளிகை கடைக்காரர் கைது...! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் ஷாம்பு வாங்க வந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மளிகை கடைக்காரரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கட்டிக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (51). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது கடைக்கு ஷாம்பு வாங்குவதற்காக 10 வயது சிறுமி வந்துள்ளார். அப்பொழுது யாரும் இல்லாததால் கருப்பண்ணன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவரிடமிருந்து தப்பி வீட்டிற்கு சென்ற சிறுமி, இது குறித்து தாயிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது குறித்து ஓமலூர் அனைத்து மகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மளிகை கடைக்காரர் கருப்பண்ணனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A grocer arrested for sexually harassing a 10 year old girl in salem


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->