மதுபோதையில் தகராறு.! கூலி தொழிலாளியை கல்லால் அடித்து கொன்ற இறைச்சிக் கடைக்காரர்.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த இறைச்சி கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு சந்தைப்பேட்டையில், நேற்று முன்தினம் இரவு கூலி தொழிலாளியான குப்புசாமி என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், குப்புசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டர். இதில் கோழி இறைச்சி கடை நடத்தி வரும் அருண்குமார் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகவும், அப்பொழுது இருவரிடையே ஏற்பட்ட தகராறில், முனுசாமியை கல்லால் அடித்து கொலை செய்ததாகவும் அருண்குமார் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A butcher who stoned a laborer to death in a drunken dispute


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->