உயிர் தோழி வேறொரு பள்ளிக்கு சென்றதால் 09-ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு: கணவனை இழந்த பெண் தவிப்பு..!
A 9th grade student made a bizarre decision after her best friend moved to another school
மதுரையில் எட்டாம் வகுப்பு வரை தன்னுடன் படித்த நண்பி 09-ஆம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு சென்றதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவரை இழந்து, தனியாக வீட்டு வேலைகளை செய்து இரு மகன்கள் மற்றும் 14 வயது மகளை படிக்க வைத்து வருகிறார்.
அரசு உதவி பெறும் பள்ளியில் 08-ஆம் வகுப்பு வரை தனது 14 வயது மகளுடன் படித்த மாணவி ஒருவர், ஒன்பதாம் வக்கப்புக்கு அவரது பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். இவர்கள் இருவரும் சிறு வயது முதலே நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். தனது உயிர் தோழி சேர்ந்த பள்ளியிலேயே தன்னையும் சேர்த்துவிடுமாறு தாயாரிடம் மகள் கூறி வந்துள்ளார்.

ஆனால், 'அந்த பள்ளியில் சேர்த்தால் கல்விக்கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். என்னால் செலவழிக்க முடியாது' என தாயார் தனது மகளை சமரசம் செய்து வந்துள்ளார்.
இதனால் நண்பியை பிரிந்து குறித்த மாணவி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். சம்பவத்தன்று வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தல்லாகுளம் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A 9th grade student made a bizarre decision after her best friend moved to another school