சென்னையில் போதை மாத்திரை விற்ற 8 பேர் கைது..!! - Seithipunal
Seithipunal


சென்னை திரு வி.க நகர் பகுதிகளில் போதை மாத்திரைகள் அதிகளவில் விற்கப்படுவதாக திரு வி.க நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திரு.வி.க நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன் தினம் காலை முதல் திருவி.க நகர், பல்லவன் சாலை, விளையாட்டு மைதானம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்பொழுது திரு.வி.க நகரை சேர்ந்த சரவணன் என்பவர் போதை பொருள் விற்பனை செய்து கொண்டிருந்ததன் அடிப்படையில் கைது செய்தனர். அதேபோன்று ஆர்.கே நகர் மீனாம்பாள் மேம்பாலம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது போலீசாரை கண்டதும் 5 பேர் ஓட்டம் பிடித்தனர். தப்பி ஓடிய 5 பேரில் 3 பேரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கல்லூரி மாணவர்கள், ஐடி பணியாளர்கள், இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை மற்றும் உடல் நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

அவர்கள் அளித்த தகவலின் பெயரில் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த வினோத்குமார், பிரகாஷ், அலெக்ஸ் ஆகிய மூன்று பேரை ஆர்.கே நகர் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை ஆர்.கே நகர் போலீசார் தேடி வருகின்றனர். 

அதேபோன்று சென்னை அடுத்த ராஜமங்கலம் பகுதியில் போதைப்பொருள் விற்றதாக கொளத்தூரை சேர்ந்த லோகேஷ், கண்ணன் சார்லஸ் மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் மட்டும் போதை பொருட்கள் விற்பனை செய்ததாக எட்டு பேர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8 people arrested for selling drugs in Chennai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->