சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ தங்கம் பறிமுதல்! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த மூன்று பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழவே சோதனை செய்துள்ளனர். 

இந்த சோதனையில் அவர்கள் கொண்டு வந்திருந்த பார்சல் பிரித்ததில் ரூ 1.63 கோடி மதிப்புள்ள 3.74 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்கத்தினை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோன்று வருகை பகுதி 5ல் கேட்பாரற்று கிடந்த பார்சலை பிரித்து சோதனை செய்த போது ரூ 96.09 லட்சம் மதிப்பிலான 2.195 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை கடத்தி வந்து இங்கு போட்டுச் சென்றது யார் என தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இது தொடர்பாக விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ஆறு கிலோ தங்கம் பறிமுதல் செய்த நிகழ்வு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 kg gold seized at Chennai airport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->