சென்னை : மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.! கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை.!
5 years in jail for a laborer who sexually harassed a mentally challenged woman in chennai
சென்னையில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சீனிவாசன். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கொரோனா தடுப்புபணி தன்னார்வலர் ஒருவர் அப்பெண்ணை மீட்டு, இதுகுறித்து அவர் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாசனை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சென்னை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனநிலை பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து சீனிவாசனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவு பிறப்புத்துள்ளார்.
English Summary
5 years in jail for a laborer who sexually harassed a mentally challenged woman in chennai