வேலூரில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ஆண் நண்பருடன் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிய பெண் மருத்துவரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி சாலையில் பெண் மருத்துவர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் ஆண் நண்பரை கட்டிப்போட்டுவிட்டு பெண் மருத்துவரை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பெண் மருத்துவர் புகார் அளிக்கவில்லை என்றாலும் போலீசார் இந்த கொடூர செயலை செய்தவர்களை கண்டுபிடித்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பெண் மருத்துவரிடமிருந்து பறித்த ஏடிஎம் கார்டில் இருந்து பணத்தை எடுத்து உல்லாசமாக செலவு செய்ததையடுத்தே இந்த கும்பல் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 man raped women doctor in velore


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->