கள்ளக்குறிச்சி : கறி விருந்து சாப்பிட்ட 40 பேர் மருத்துவமனையில் அனுமதி.!
40 people admitted to hospital after eating curry dinner
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே மேலந்தல் கிராமத்தில் கரும்பு வெட்டும் குழுவினர் 40 பேர் ஒன்று சேர்ந்து நேற்று மதியம் கோழிக்கறி சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
இதில், சாப்பிட்ட சில மேணி நேரங்களிலேயே அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அனைவரும் மணலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சரியில்லாத உணவை சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி, மயக்கம் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
40 people admitted to hospital after eating curry dinner