பிரதமரிடம் பாராட்டுப்பெற்ற கல்பாக்கம் சிறுமி.! ஆச்சரிய நிகழ்வின் சுவாரஸ்ய பின்னணி.!
4 th std girl got wishes from pm modi
சென்னை அருகே கல்பாக்கத்தில் அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் அர்ஜுன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மகள் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் பள்ளி விடுமுறை காரணமாக ஆக்குமெண்டெட் ரியாலிட்டி வகையில் அந்தப் பெண் ஒரு வீடியோவை உருவாக்கி தற்போது பிரதமரிடம் பாராட்டை பெற்று இருக்கின்றார்.
வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் என்பது குறித்து பல்வேறு விஷயங்களை அந்த வீடியோவில் அவர் விளக்கி இருக்கிறார். இது பிரதமரின் கவனத்தை தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் கிடைத்தது.
இது குறித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி பகிர்ந்து பாராட்டி இருக்கின்றார். ஊடகங்களில் இந்த செய்தி வெளியான நிலையில் செங்கல்பட்டு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று பொன்னாடை போர்த்திய பாஜகவினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.
English Summary
4 th std girl got wishes from pm modi