நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த கார் - உள்ளே சிக்கிய 4 பேர்.. வேடசந்தூர் அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் கார் கவிழ்ந்து நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(46). இவர் தனது மாமனாரின் கண் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாமனார் மாமியாருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இன்று காலை சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார், பாலத்தின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதையடுத்து கார் திடீரென நடு ரோட்டில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட நான்கு பேரும் காயமடைந்தனர். இதில் ஓட்டுநர் மற்றும் சந்தோஷ் குமாரின் மாமனார் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்த நான்கு பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 injured in A car caught fire in the middle of the road in near vedasandur


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->