தமிழ்நாட்டில் பறவை காய்ச்சலா? ஆரணி அருகே 350 கோழிகள் உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்ட பிறகே வாகனங்கள் தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றன. 

அதேபோன்று தமிழ்நாட்டில் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழி பண்ணைகளில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

பறவை காய்ச்சல் பரவல் காரணமாக முட்டை மற்றும் கோழிக்கறியின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதற்கிடையே திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள புது பாளையத்தில் சுமார் 350 கோழிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த சில நாட்களாக வட உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் கோழிகள் இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

350 chicken died in arani thiruvannamalai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->