திண்டுக்கல் || ஆட்டோ கவிழ்ந்து விபத்து - பள்ளி குழந்தைகள் உட்பட 3 பேர் காயம் - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட 3 பேர் காயமடைந்து உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டி கருவூல காலனியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் மூர்த்தி (53). இவர் இன்று காலை வழக்கம் போல் பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது திண்டுக்கல் - திருச்சி நான்கு வழிச்சாலை இ.பி காலனி பிரிவு அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக அந்த வழியாக மாடுகள் குறுக்கே வந்ததால், திடீரென மூர்த்தி பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலை தடுமாறி ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மூர்த்தி மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளிக் குழந்தைகளான ராஜக்காபட்டியை சேர்ந்த நாகசாமி மகன் கிஷோர்(7) மற்றும் வேதாத்திரி நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் லோக்சனா(11) ஆகியோர் காயமடைந்தனர். 

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 people including school childrens injured in auto overturn accident in Dindigul


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->