நேருக்கு நேர் மோதி கொண்ட இருசக்கர வாகனங்கள்... மூவர் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மாதேப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் கௌதம், பிரவீன், சூரியபிரகாஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் கொடும்பாளூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  எதிரே கொடும்பாளூரைச் சேர்ந்த சிலர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

 அப்போது சத்திரம் என்ற இடத்தில் இரண்டு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கவுதம் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ரங்கசாமி கார்த்திக் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 Members Death in Accident


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->