சோறுபோட்ட உரிமையாளரின் வீட்டில் துணிந்து கொள்ளை.. அரங்கேறிய கொடூர கொலை..! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியை சார்ந்தவர் சீனிவாசன் (வயது 60). இவரது மனைவி நளினா (வயது 50). இவர்களது மகள் ஐஸ்வர்யா திருமணம் முடிந்து, கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். சீனிவாசன் செவ்வாய்பேட்டை பகுதியில் பழைய பேப்பர் கடை நடத்தி வந்த நிலையில், வீட்டிற்கு மதிய வேளைகளில் சென்று சாப்பிட்டு வரும் நேரங்களில், கடையை அவரின் மனைவி நளினா பார்த்து வந்துள்ளார். 

கடந்த 8 ஆம் தேதி மதியம் வீட்டிற்கு சென்ற சீனிவாசன் நீண்ட நேரம் ஆகியும் கடைக்கு வராததால், நேரில் சென்ற நளினா கணவரை தேடுகையில் தலையில் அடிபட்டு மயங்கி இருந்துள்ளார். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சீனிவாசன் தவறி விழுந்து அடிபட்டு மயங்கி இருந்ததாக நினைத்து உடலை எரித்துள்ளனர். 

இந்நிலையில், வீட்டில் இருந்த 55 பவுன் நகைகள் மற்றும் வைர நகைகள் காணாமல் போயுள்ளது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சீனிவாசனை கொலை செய்த மர்ம நபர்கள், நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், சீனிவாசனின் கடையில் பணியாற்றிய தமிழ்ச்செல்வனை (வயது 25) சந்தேகத்தின் கீழ் விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில், தமிழ் செல்வன், அவனது நண்பன் கார்த்திக் கண்ணன் (வயது 26) மற்றும் 17 வயது மாணவன் ஆகியோர் சேர்ந்த சீனிவாசனை அடித்து கொலை செய்து, 55 பவுன் நகைகள் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றது உறுதியாகியுள்ளது. மேலும், தினக்கூலியாக பணியாற்றி வந்த தமிழ்செல்வன், உரிமையாளரிடம் உள்ள நகையை கண்டு ஆசைப்பட்டு கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 Man gang Murder Aged man and Robbery his House Police investigation 12 Jan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->