சரவணா ஸ்டோர்ஸ் கடை மற்றும் அலுவலகங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை.!!
2nd day it raid in saravana stores
சென்னையில் உள்ள பிரபல வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸில் இரண்டாவது நாளாக வருமான வரி சோதனை நடத்தி வருகின்றனர்.
சரவணா ஸ்டோர்ஸ் 1970 ஆம் ஆண்டில் ஒற்றைக் கடையாக தொடங்கப்பட்டு பின்னர் சில்லறை விற்பனைக் கடைகளின் சங்கிலித்தொடராக பல கிளைக் கடைகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
சரவணா ஸ்டோர்ஸ் 1970 செப்டம்பர் 4 அன்று சென்னை, தி நகரில் ஒரு பாத்திரக் கடையாக மட்டும் துவக்கப்பட்டது. இது சிறிதுசிறிதாக வளர்ந்து வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்கும் அங்காடியாக 1998 இல் உருவானது. தற்போது சென்னையில் பல கிளைகள் உள்ளது.
இந்நிலையில், சென்னை புரசைவாக்கம், தியாகராயர் நகர், போரூர், குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடை மற்றும் அலுவலகங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
English Summary
2nd day it raid in saravana stores