#தமிழகபட்ஜெட்2023 | எல்லையில் உயிரிழக்கும் தமிழக ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு, கருணைத்தொகை இரட்டிப்பு.!
2023 BUDGET TN MILITARY SOLDIAR DEATH FUND
2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் பொழுது உயிர் தியாகம் செய்யும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு இனி கருணை தொகை 40 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணி முதல் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. கடந்த ஜனவரி 9ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் ஆர் என் ரவியின் உரையுடன் தொடங்கியது.
சில நாட்கள் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் அதன் பின் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இத்தகைய நிலையில், மார்ச் 20ஆம் தேதியான இன்று காலை 10 மணிக்கு 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை படிக்க துவங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார். அதன் ஒரு பகுதியாக, "நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் பொழுது உயிர் தியாகம் செய்யும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு இதுவரை 20 லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்கப்பட்ட நிலையில், இதை அப்படியே இரண்டு மடங்காக உயர்த்தி 40 லட்சம் ரூபாய் இனி வழங்கப்படும்." என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
English Summary
2023 BUDGET TN MILITARY SOLDIAR DEATH FUND