விருதுநகர் : 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் விக்டர் அந்தோணி ராஜ் (62). இவர் கடந்த 2022ஆம் ஆண்டு 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் விக்டர் அந்தோணி ராஜை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த லிட்டர் அந்தோணி ராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 years in prison for an oldman who molested a 3 year old girl in virudhunagar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->