11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! அக்கா கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை.!
20 years imprisonment for sister husband who sexually harassed an 11 year old girl in virudhunagar
விருதுநகர் மாவட்டத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அக்கா கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் 30 வயதுடைய வாலிபர். இவர் கடந்த வருடம் ஜூன் மாதம் தனது மனைவியின் 11 வயது தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வாலிபரை கைது செய்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனைவியின் 11 வயது தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.
English Summary
20 years imprisonment for sister husband who sexually harassed an 11 year old girl in virudhunagar