மதுரை : வேன் கவிழ்ந்து விபத்து - 20 பெண்கள் காயம் - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 20 பெண்கள் காயமடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அ.வள்ளாளப்பட்டி, புலிப்பட்டி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களை ஏற்றிக்கொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான வேன் இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்பொழுது வள்ளாளப்பட்டி பகுதி அருகே சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 20 பெண்கள் காயமடைந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 woman injured in van overturned in madurai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->