#தூத்துக்குடி || லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து - 20 பயணிகள் காயம் - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் எட்டையப்புரம் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நோக்கி பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எட்டையப்புரம் அருகே மஞ்சநாயக்கன்பட்டி நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற லாரியின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து முன்பகுதி சேதமடைந்த நிலையில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து காயமடைந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 injured in lorry private bus collision in Thoothukudi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->