ஈரோட்டில் பரிதாபம்.! வாய்க்காலில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி..! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் வாய்க்காலில் மூழ்கி இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர்கள் முகமது ரிஸ்வான் (21), முகமது சுபீர் (22). நண்பர்களான இவர்கள் இரண்டு பேரும் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கருக்கம்பாளையம் கீழ் பவானி வாய்க்காலுக்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்பொழுது குளித்து கொண்டிருந்த இருவரும் எதிர்பாராதவிதமாக வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் இது குறித்து பெருந்துறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றினர். 

இதைத்தொடர்ந்து காஞ்சிக்கோவில் போலீசார் இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 youths drowned canal in erode


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->