#விருதுநகர் | மின்னல் தாக்கி 2 வாலிபர்கள் பலி.! ஆடு மேய்க்க சென்றபோது பரிதாபம்..! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் ஆடு மேய்க்க சென்ற 2 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் புல்லநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (28). இவரும், அதே பகுதியை சேர்ந்த விஜய் (27) என்பவரும் வழக்கம்போல் காட்டுப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றனர். அப்பொழுது திடீரென பலத்த மழை பெய்துள்ளது. இதில் மின்னல் தாக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஆடுகள் மட்டும் வீட்டிற்கு வந்ததால், உறவினர்கள் இவர்கள் இரண்டு பேரையும் தேடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இரண்டு பேரும் காட்டுப்பகுதியில் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இரண்டு பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், இரண்டு பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 young mans killed by lightning in virudhunagar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->