2வது மனைவியுடன் தகராறு.. இரண்டு வயது குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


குடும்ப தகராறில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளை பூரணி பகுதியை சேர்ந்தவர் டேவிட் பினகாஸ். இவர் கணவரை பிரிந்து வாழும் ஸ்டெபினா என்பரை ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஸ்டெபினா இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஸ்டாலின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இருவருக்குமிடையே வழக்கம்போல வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த டேவிட் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஸ்டெபினா இரண்டு வயது மகள் தொட்டியில் தூக்கி சுவற்றில் அளித்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டேவிட்டை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 years old baby Death in Thoothukudi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->