சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் வேதபாடசாலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், செவிலிமேடு பகுதியை சேர்ந்த சபரி(26) மற்றும் தேனம்பக்கத்தை சேர்ந்த மதன்(22) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 25 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 person arrested for cannabis selling in kanchipuram


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->