ஊட்டி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! 2 வடமாநில தொழிலாளர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


ஊட்டி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரண்டு வட மாநில தொழிலாளர்களை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தேவர்சோலை பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராணா ஓரான்(30) மற்றும் பாபுலான் ஓரான்(30) ஆகிய இரண்டு பேரும் தேயிலை எஸ்டேட்டில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயதுடைய சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதனால் சிறுமி சத்தம் போடவே அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர். இதைப்பார்த்து இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதை எடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை ஊட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த 2 வட மாநில தொழிலாளர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 North State workers arrested for sexually harassing a 7 year old girl near Ooty


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->