தமிழகத்தில் இன்று (செப்-15) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!
15.09.2022 tamilnadu power cut places
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்..15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கோவை மாவட்டம்
பீளமேடு துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் இன்று செப்டம்பர் 15-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம்
ஓட்டப்பிடாரம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காராணமாக இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்காரணமாக தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, தியாகை, எலவனாசூர்கோட்டை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, அய்யனார்பாளையம், பழையசிறுவங்கூர், சூளாங்குறிச்சி, மாடூர், மடம், பிரிதிவிமங்களம், வீரசோழபுரம், வீ.பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
கடலூர் மாவட்டம்
கீழ்கவரப்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
English Summary
15.09.2022 tamilnadu power cut places