#Breaking :: தமிழக மீனவர்கள் 15 பேர் கைது! மன்னார் கடற்படை முகாமில் விசாரணை! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் 300க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு விசைப்படகுகள் மூலம் செல்கின்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு மற்றும் தலைமன்னார் இடையேயான ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்பறையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் இரண்டு விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்.

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலையான நிலையில் இன்னும் நாடு திரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் இன்று மீண்டும் 15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது ராமேஸ்வரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 Tamil Nadu fishermen arrested by Srilankan navy


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->