செங்கல்பட்டு : லாரி மீது வேன் மோதி விபத்து - 13 பேர் படுகாயம்
13 injured in van lorry accident in Chengalpattu
செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மேல்மருவத்தூர் கோவிலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி 20 பக்தர்களுடன் நேற்று காலை வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது வண்டலூர் அருகே வேன் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 12 பெண்கள் உட்பட 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
13 injured in van lorry accident in Chengalpattu