தேசிய அளவிலான இறகு பந்தாட்ட போட்டியில் திருநெல்வேலி மாணவி வெள்ளி பதக்கம்! குவியும் பாராட்டு!
12th students achievement
தேசிய அளவிலான இறகு பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்ற நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவி, குவியும் பாராட்டுக்கள்:
உத்தரபிரதேச மாநிலத்தில் தேசிய அளவிலான இறகு பந்தாட்ட போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இதில் இரட்டையர் பிரிவில் இறகு பந்தாட்ட போட்டி கலந்து கொண்ட நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி ரேஷிகா வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மேலும், அதே பள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் கவின் சாய் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான தமிழக வாட்டர் போலோ அணிகளுக்கான தகுதி போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
அப்பள்ளியின் சேர்மன், தாளாளர், முதல்வர், உடற்கல்வி இயக்குநர்த், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன் குமார் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
English Summary
12th students achievement