பெற்றோர் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை
12th student suicide in tirupattur
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி லட்சுமணன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் விமல்(18) பொன்னேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் விமல், படிப்பில் கவனம் செலுத்தாமல் அடிக்கடி ஊர் சுற்றி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த விமல் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சடைந்த நிலையில், உடனடியாக விமலை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் விமல் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
12th student suicide in tirupattur