விளையாட்டாக இருந்த மாணவனை கண்டித்த பெற்றோர்.. மாணவன் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காஞ்சிகோவில் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மிதுமித்தின்(வயது 17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் படிப்பில் கவனம் செலுத்தாத மிதுமித்தினை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12th student get suicide


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->