#கிருஷ்ணகிரி || மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட 12ம் வகுப்பு மாணவன்..!
12th Student Committed Suicide
12ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள அரசு பள்ளியில் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவன் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த மாணவனுக்கு துணையாக இருந்த அவரது தாத்தா கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலில் இருந்த அவர் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவள்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபமாக பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகும். அரசு இதனை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
12th Student Committed Suicide