பொதுதேர்வு சரியாக எழுதவில்லை என 12ம் வகுப்பு மாணவன் செய்த விபரீத செயல்..! - Seithipunal
Seithipunal


தேர்வு சரியாக எழுதவில்லை என மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன். இவரது மனைவி மாரீஸ்வரி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரது மூத்த மகன் பிரவீன் கார்த்திக் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

 இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவு அடைந்த நாளில் இருந்தே தேர்வு சரியாக எழுதவில்லை என கூறி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது . இதற்கிடையில், சம்பவத்தன்று தனது வீட்டில் அவர் தூக்கில தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12th grade student Committed Suicide in Madurai


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->