நாமக்கல் அருகே பரபரப்பு.! தனியார் பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் தியாகு. இவரது மகள் சுவாதி(17) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு சென்ற சுவாதி, படித்துவிட்டு விடுதிக்கு வந்துள்ளார்.

இதையடுத்து சுவாதி பள்ளிக்கு செல்லாததால், சக மாணவிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது அறை உள்பாக்கம் பூட்டப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுவாதி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுவாதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவி சுவாதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12th class girl commits suicide in private school hostel in namakkal


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->