நாமக்கல் அருகே பரபரப்பு.! தனியார் பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் தியாகு. இவரது மகள் சுவாதி(17) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு சென்ற சுவாதி, படித்துவிட்டு விடுதிக்கு வந்துள்ளார்.

இதையடுத்து சுவாதி பள்ளிக்கு செல்லாததால், சக மாணவிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது அறை உள்பாக்கம் பூட்டப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுவாதி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுவாதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவி சுவாதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12th class girl commits suicide in private school hostel in namakkal


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->