தமிழகத்தில் இன்று (செப்-12) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (12-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சிவகங்கை 

சிவகங்கை மாவட்டம் கோவிலூா் அருகே மானகிரி, கண்டரமாணிக்கம் நாச்சியாபுரம் பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.12) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

திருப்பூர் 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியில் மின்பாதை பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது. அதன்காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை காந்திநகர், எம்.ஜி.ஆர். நகர், எம்.ஜி.ஆர். காலனி, டால்பின் நகர், அனுமன் நகர், காமராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12.09.2022 power cut places in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->