தமிழ்நாட்டில் 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி கொளுத்திய வெயில்- வானிலை மையம் தகவல் - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்ஆங்கே மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. எனினும் இன்று தமிழகத்தில் 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அடுத்து தூத்துக்குடி, வேலூர் பகுதிகளில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. திருச்சி, கடலூர், ஈரோடு, மதுரை நகர் பகுதிகளில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. பரங்கிப்பேட்டை மற்றும் நாகையில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. தஞ்சை, புதுச்சேரி பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 places in Tamil Nadu were scorched with temperatures exceeding 100 degrees Fahrenheit Meteorological Department Information


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->