#திருவள்ளூர் || சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 11 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிறுணை கிராமத்தை சேர்ந்த சிலர், பெரம்பூர் பகுதியில் உள்ள பூந்தோட்டத்திற்கு பூப்பறிக்க வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனில் பயணம் செய்த சிறுவர்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். இதனிடையே ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஓட்டுநர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 injured in van overturning in a ditch in tiruvallur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->